எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களின் வெற்றியினை உறுதிசெய்யும் வகையில், தொழிலாளர் தேசிய சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டம் பண்டாரவளையில் இன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஊவா மாகாண அமைப்பாளர் பகி பாலச்சந்திரன் கலந்துகொண்டிருந்தார். அத்துடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களும் தொழிற்சங்கவாதிகளும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.


