Hope for children -the community development project of Believers Eastern church என்னும் சமூக நலத்திட்ட பணியினால் நானு ஓயா மற்றும் அம்பேவேலா பகுதியில் 8 &19.11.2024 திகதி அன்று நு /கார்லபேக் தமிழ் வித்தியாலயம்,ப / சரஸ்வதி தமிழ் வித்தியாலயம், டிரினிடி சன் சைன் முன் பள்ளி ஆகிய பாடசாலைகளுக்கு புத்தகங்கள் மற்றும் பள்ளி சார்ந்த ஆவணங்களை வைக்கும் அலமாரிகளும், நாற்காலி மற்றும் மேசைகளும் போல் வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் HFC நிறுவன ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை: G.குணாளன் , பிலிவ்ஸ் ஈஸ்டன் சர்ச் ஆலயத்தின் அருட்தந்தை மகேஸ்வரன் , HFC நிறுவனத்தில் பணிபுரியும் திருமதி.வினிஷியா, திரு.ரிகான், சமூக ஆர்வலர்: தமிழ்செல்வன், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் சிறார்கள் ஒன்றிணைந்து இந்நிகழ்வினை சிறப்பித்தனர்.
பாடசாலையின் வளர்ச்சி பள்ளி குழந்தைகளுடைய வளர்ச்சிக்கு உதவும் என்பதே Hope for Children நலத்திட்ட நிறுவனத்தின் எதிர்பார்ப்பு.
குழந்தைகளின் வளர்ச்சியில் பல்வேறு விதங்களில் பங்களிக்கின்ற hope for children நிறுவனத்தோடு கைகோர்த்த அனைத்து ஆசிரியர்களுக்கும் மற்றும் இந்த நிறுவனத்தின் நிர்வாகக் குழுவினருக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.


