கண்டி புசல்லாவ பொலிஸ் பிரிவுக்கு உற்ப்பட்ட நயாப்பன மேல் பிரிவு தோட்டத்தில் உள்ள தேயிலை மலையில் சிறுத்தையின் சடலம் ஒன்று மீட்பு.
புசல்லாவ நயாப்பன மேல் பிரிவு தோட்டத்தில் இறந்த நிலையில் சிறுத்தை சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
அப் பிரதேச மக்கள் சிறுத்தை சடலத்தை இனங்கண்டு அந்த தோட்டத்தில் உள்ள மடுவத்திற்க்கு சடலத்தை கொண்டு சென்று புசல்லாவ பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளனர்,
இதனை தொடர்ந்து கம்பளை வனஜீவராசி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை எடுத்து சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கம்பளை வனஜிவராசி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
