கேகாலை எதுராபொல தோட்டத்தில் தொழிலாளியின் வளர்ப்பு ஆடுகள் தோட்டத்தில் பாக்கு செடியை தின்றதாக கூறி தோட்ட முகாமையாளர் குறித்த மூன்று ஆடுகளையும் பங்களாவில் அடைத்து வைத்த நிலையில் ஒரு ஆட்டை முகாமையாளரின் நாய் உண்டுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தோட்ட முகாமையாளர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை செய்த பொலிஸார் தோட்ட பகுதியில் உள்ள பாக்கு கன்றை ஆடுகள் தின்றுவிட்டதாகவும் அதனால் அந்த கன்று வளர்ந்து தரும் லாபத்தோடு நாஷ்ட ஈட்டை ஆட்டு சொந்தக்காரர் வழங்கவேண்டும் என்று கோரியிருக்கிறார் ,பதிலுக்கு ஆட்டு சொந்தக்காரரான தொழிலாளி நாயால் அடித்து கொள்ளப்பட்ட ஆட்டுக்கும் ஆடு 05 வருடங்களில் குட்டிகளை ஈன்று தரும் வருமானத்தை வழங்கவேண்டும் என்று கோரியிருக்கிறார்.இறுதியில் இருவரையும் சமாதானம் செய்து பொலிஸார் அனுப்பிவைத்திருக்கின்றனர்.
