பாணந்துறை பகுதியில் இருந்து சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த பெண் ஒருவர் மரணம்.
குறித்த சம்பவம் நேற்று 16 ம் திகதி இரவு இடம் பெற்றுள்ளது.
இது குறித்து நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில் பாணந்துறை பகுதியில் இருந்து சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த 53 வயது உடைய தீபாணி ஹேமமாலி என்ற பெண் நல்லதண்ணி வாகனம் நிறுத்தும் பகுதியில் வைத்து கடும் சுகவீனம் காரணமாக அவசர அம்பூலன்ஸ் மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வந்த வேலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிர் இழந்தது உள்ளார் என குறிப்பிட்டார் .
அவரது உடலம் வைத்திய சாலையில் வைக்கபட்டுள்ளது.
உடற் கூற்று பரிசோதனை மேற்கொள்ளபட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க பட உள்ளது என நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
மஸ்கெலியா நிருபர்.
