பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹல மஸ்ஸென்ன பகுதியில் தந்தை ஒருவர் தனது மகனை தாக்கிவிட்டு அவரும் விஷம் அருந்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நான்காம் திகதி மகனை தடியால் தாக்கியதோடு தந்தையும் விஷம் அருந்தி உள்ளார்.
இந்நிலையில் குறித்த இருவரும் ஆபத்தான நிலையில் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே மகனின் நிலைமை மோசமாக இருப்பதால் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
23 வயதுடைய பல்கலைக்கழக மாணவனான மகன் வீட்டில் தந்தையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
விசாரணைகளில் தந்தைக்கும் தாயாருக்கும் அடிக்கடி சண்டை வருவதாகவும் குறித்த தினம் தந்தை தாயாரை கத்தியால் குத்த முயன்றுள்ளதாகவும் விசாரணைகளின் ஊடாக தெரிய வந்துள்ளது.
மேலும் பலாங்கொடை மேலதிக நீதிவான் பாக்யா தில்ருக்ஸி விக்ரமசிங்க வைத்திய சாலைக்கு சென்று அவரை 17 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டார்.
அதன் படி தந்தை தற்போது பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில்
சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்.
இரத்தினபுரி குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளைமேற்கொண்டு வருவதோடு. பலாங்கொடை பொலிசார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
