ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவிற்குற்குட்பட்ட ரொசட் தோட்ட வீதி, கிரவனாகொட, உடுவர பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று முன்தினம் மாலை வேளையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக வீட்டினுள் இருந்த 9 வயதுடைய சிறுமி காயங்களுக்கு உள்ளாகி பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர் ஹாலிஎல பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் தரம்- 04 இல் கல்வி கற்கும் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக வீட்டின் இரு அறைகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
பதுளை மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக பிற்பகல் வேளையில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக பல பகுதிகளிலும் மண்சரிவு அனர்த்தம் ஏற்படும் அபாய நிலைமை தோன்றியுள்ளது.
பசறை நிருபர். 28.04.2025
