ஜப்பான் அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் தொடர்ச்சியான அபிவிருத்தி ஒத்துழைப்பின் கீழ், நாட்டின் பொதுப் போக்குவரத்துச் சேவையின் மேம்பாட்டிற்காக ஏழு தாழ்தளப் பேருந்துகள் (Low-floor buses) நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
ஜப்பானிய அரசாங்கம் மற்றும் ஜப்பானின் யோகோஹாமா (Yokohama) நகர மக்களின் கூட்டு நன்கொடையாக இலங்கைக்கு வழங்கப்பட்ட இந்த ஏழு புதிய பேருந்துகளையும் இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் HE Akio Isomata அவர்களினால் உத்தியோகபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
