போதைப்பொருள் பயன்படுத்தி வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறியும் விசேட சோதனை: பிலியந்தலையில் 252 பேரில் 7 பேர் அடையாளம் காணப்பட்டனர்
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வீதிப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், அபாயகரமான போதைப்பொருட்களைப் பயன்படுத்தி பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களைக் கண்டறிவதற்கான திடீர் சோதனைகள் நேற்று (2026.09.01) முற்பகல் பிலியந்தலை பிரதான பஸ் நிலையத்தை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டன.
இதற்கமைய, பஸ் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் உட்பட சுமார் 252 பேர் இச்சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவர்களில் 07 பேர் அபாயகரமான போதைப்பொருட்களைப் பயன்படுத்தியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
