கட்டாரில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல்-உதெய்த் விமானத் தளத்தின் மீது ஈரான் ஆறு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் தோஹாவில் வெடிக்கும் சத்தங்கள் கேட்டதாகவும், இந்தத் தாக்குதல் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் ஆக்சியோஸ் ஊடகத்திற்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அல்-உதெய்த் தளத்தில் அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் அமைந்துள்ளது, மேலும் சுழற்சி முறையில் பிரிட்டிஷ் இராணுவ வீரர்களும் உள்ளனர்.
இருப்பினும், சமீபத்திய வாரங்களில் பல விமானங்கள் இத்தளத்திலிருந்து மாற்றப்பட்டதாக செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் வொஷிங்டனில் அவசர கூட்டம் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி தெரண
