காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் மலையக மக்கள் தொடர்பில் எரிக் சொல்ஹெய்முடன் முக்கிய விடயங்களை முன்வைத்த கலாநிதி ரா.ரமேஷ்
கொழும்பு: இலங்கையின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim) மற்றும் பேராதனிய பல்கலை கழக அரசறிவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ரா .ரமேஷ்க்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இன்று கொழும்பில் நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய அரசியல் மாற்றங்கள் மற்றும் போருக்குப் பின்னரான மீள்கட்டுமானப் பணிகள் குறித்து விரிவான ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டன.
தற்போது தென்கிழக்காசிய நாடுகளில் காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் தொடர்பான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள சொல்ஹெய்மிடம், இலங்கையின் காலநிலை சவால்களை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோது,
அதற்குப் பதிலளித்த அவர், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்வதற்கு இலங்கை தனது தயார்நிலை பொறிமுறைகள் (Preparedness mechanisms), கொள்கைகள் மற்றும் நிறுவன ரீதியான திறன்களை (Institutional capacity) கணிசமான அளவு பலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
குறிப்பாக, அனர்த்தங்களுக்கு முன்னரான மற்றும் பின்னரான சூழ்நிலைகளை திறம்பட கையாள்வதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவது அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார். மலையக பெருந்தோட்ட பகுதிகள் கலநிலை மாற்றத்தின் போது எவ்வாறு ஆபத்தான நிலைக்கு மாற்றமடைந்து இருக்கின்றது என்பதற்கு டித்வா புயலின் அனர்த்தம் மிக பெரிய உதாரணம் என சுட்டி காட்டியதோடு, இந்த அனர்த்தத்தில் பெருந்தோட்ட பகுதிகளின் லயன் குடியிருப்புக்கள் மற்றும் மலைகள் சரிந்து விழுந்து எப்படி பாதிப்புக்குள்ளானது தொடர்பில் இதன் போது எரிக் சொல்ஹெய்மிடம் எடுத்துக்கூறினார் ,மேலும் இலங்கை மற்றும் சர்வதேச ரீதியில் காலநிலை மாற்றம் பற்றி பேசுகின்ற பொழுது இலங்கை பெருந்தோட்ட மலையக மக்கள் காலநிலை மாற்றத்தால் எவ்வளவு பாதிப்படைந்திருகின்றார்கள் , பலவீனமுற்று இருக்கின்றார்கள் என்பது தொடர்பிலும் சர்வதேச ரீதியில் எடுத்துரைக்குமாறு பேராசிரியர் இதன்போது சொல்ஹெய்மிடம் கேட்டுக்கொண்டார்.
