இலங்கை முழுவதிலுமுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காகத் திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சை 2026.
இலங்கை முழுவதிலுமுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக, திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பங்களைக் கோரி 2026 பெப்ரவரி 02 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 2474/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் 5.1 ஆம் பிரிவின் பிரகாரம், பட்டத் தகைமைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டிய இறுதித் திகதியை 2026 மார்ச் 05 ஆம் திகதி எனத் திருத்தம் செய்வதற்கு 2026.02.16 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அதற்கமைய, மேற்கூறப்பட்ட இலக்கத்தைக் கொண்ட வர்த்தமானி அறிவித்தல் திருத்தியமைக்கப்படும்.

