இலங்கை மின்சார சபையின் தலவாக்கலை கிளைக்கு உட்பட்ட லிந்துலை, இராணிவத்தை நோனா தோட்டம், பம்பர கலை, நாகசேனை, பர்ஹாம் மற்றும் டீ மலை ஆகிய பகுதிகளில் இன்று (பிப்ரவரி 20, 2026) எவ்வித முன்னறிவித்தலுமின்றி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மின்வெட்டு நேரம்: இன்று அதிகாலை 2:00 மணி முதல் காலை 8:00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் வழமைக்குத் திரும்பிய நிலையில், மீண்டும் மாலை 5:00 மணி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது சாதாரண தர (O/L) பரீட்சை நடைபெற்று வரும் நிலையில், இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாததால் மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பரீட்சை காலங்களில் மாணவர்களின் நலன் கருதி தடையற்ற மின்சாரம் வழங்கப்படவேண்டியது குறித்து கல்வி அதிகாரிகள் அல்லது பிரதேச செயலகம் அரசு உயர் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.
