Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா?

July 11, 2026

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழை

July 11, 2026

சேவைக்காலத்தை பூர்த்தி செய்து நாடு திரும்பும் கொரியத் தூதுவர் மியோன் லீ, ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார்

July 11, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தலவாக்கலை-மயங்கி விழுந்தவரை காப்பாற்றி 25 இலட்சம் பெறுமதியான பொருட்களையும் ஒப்படைப்பு
Breaking

தலவாக்கலை-மயங்கி விழுந்தவரை காப்பாற்றி 25 இலட்சம் பெறுமதியான பொருட்களையும் ஒப்படைப்பு

ThanaBy ThanaMarch 16, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மனிதநேயத்துடன் செயற்பட்ட தலவாக்கலை பொலிஸார்: மயங்கி விழுந்தவரை காப்பாற்றி 25 இலட்சம் பெறுமதியான பொருட்களையும் ஒப்படைப்பு!

தலவாக்கலை: மனிதநேயம் குறைந்து வரும் தற்காலச் சூழலில், கடமையைத் தாண்டி மனிதாபிமானத்துடன் செயற்பட்ட தலவாக்கலை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களின் செயல் பொதுமக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

சம்பவம் குறித்த விபரமாவது: கடந்த சனிக்கிழமை தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நகரில் நபர் ஒருவர் திடீரென மயக்கமடைந்து வீதியில் விழுந்துள்ளார். குறித்த நபர் நீண்டநேரமாக சுயநினைவற்ற நிலையில் தரையில் கிடந்த போதிலும், அந்த இடத்தில் இருந்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், ஊழியர்கள் அல்லது அங்கிருந்த பொதுமக்கள் எவரும் அவரை காப்பாற்றவோ அல்லது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவோ முன்வரவில்லை எனத் தெரியவருகிறது.

இதனையடுத்து, தலவாக்கலை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த தலவாக்கலை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி திரு. சுகத் மடுலகல்ல உள்ளிட்ட பொலிஸ் குழுவினர், மயக்கமடைந்த நிலையில் இருந்த நபரை உடனடியாக முச்சக்கர வண்டி ஒன்றின் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர்.

பாதுகாக்கப்பட்ட பெறுமதியான பொருட்கள்: மயங்கி விழுந்த நபரிடம் சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள், ரொக்கப்பணம் மற்றும் விலை உயர்ந்த கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பெறுமதிமிக்க பொருட்கள் இருந்துள்ளன. அவற்றை மிகவும் பாதுகாப்பாக மீட்ட பொலிஸார், நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து, இன்றைய தினம் குறித்த நபரின் உறவினர்களை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்த பொலிஸ் அதிகாரிகள், அவர்கள் முன்னிலையில் அனைத்துப் பொருட்களையும் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.

உயிர் தப்பிய நபர்: பொலிஸாரின் துரித நடவடிக்கையினால் குறித்த நபர் உடனடியாக கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் உரிய சிகிச்சையைப் பெற்று இன்று (16) குணமடைந்து சுகதேகியாக வீடு திரும்பியுள்ளார்.

எவ்வித எதிர்பார்ப்புமின்றி மனிதநேயத்துடன் செயற்பட்டு ஒரு உயிரையும், அவரது உடைமைகளையும் பாதுகாத்த தலவாக்கலை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களை, பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினரும் சமூக ஆர்வலர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.


செய்தித் தொகுப்பு: கௌசல்யா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழை

    July 11, 2026

    அக்கரப்பத்தனை -கிலைன்ளைன் பாடசாலையில் கல்வி முதுமாணிப் பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா

    July 11, 2026

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

    July 10, 2026
    Editors Picks

    சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா?

    July 11, 2026

    நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழை

    July 11, 2026

    சேவைக்காலத்தை பூர்த்தி செய்து நாடு திரும்பும் கொரியத் தூதுவர் மியோன் லீ, ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார்

    July 11, 2026

    அக்கரப்பத்தனை -கிலைன்ளைன் பாடசாலையில் கல்வி முதுமாணிப் பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா

    July 11, 2026

    சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா?

    July 11, 2026

    நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழை

    July 11, 2026

    சேவைக்காலத்தை பூர்த்தி செய்து நாடு திரும்பும் கொரியத் தூதுவர் மியோன் லீ, ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார்

    July 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.