கினிகத்தேனை கெனில்வத்தை தோட்டத்தில் மீன்பிடி சிறுத்தை ஒன்று சடலமாக மீட்பு.
கினிகத்தேனை கெனில்வதை தோட்ட பகுதியில் உயிரிழந்த நிலையில் மீன்பிடி பூனை சிறுத்தை (Fishing Cat) ஒன்றின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்கள் தோட்டத்தில் பணியாற்றி கொண்டிருந்த வேளையில் குறித்த சிறுத்தையின் சடலத்தைக் கண்டு உரிய அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
உயிரிழந்த சிறுத்தையின் உடலில் வெளிப்படையான காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்பதுடன், மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இது குறித்து கினிக்கத்தேன பொலிசார் நல்லதண்ணி வனத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலயில் ,
சம்பவம் நடந்த இடத்திற்கு நல்லதண்ணி வன ஜீவராசிகள் அதிகாரி ஆர் எம் பி ரத்நாயக்க குழுவினர் சென்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுத்தையின் உடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ரந்தெனிகல மிருக வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர்
