பசறையில் வீடு ஒன்றில் தீ விபத்து – சமையல் அறை முற்றிலும் சேதம்
பசறை, மிதும்பிட்டிய கலபொட தோட்டப்பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்று (07) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வீட்டின் முன்புறத்தில் அமைந்திருந்த சமையல் அறையில் முதலில் தீ பரவியதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அப்பகுதி மக்கள் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த தீ விபத்தினால் சமையல் அறையில் இருந்த அனைத்து உபகரணங்களும் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளன. எனினும், இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
