அனைத்து அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று (ஏப்ரல் 20) ஆரம்பமாகவுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கான 2026ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகி, எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
முஸ்லிம் பாடசாலைகளின் 2026ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் நான்காம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாவதுடன், அவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
அதனைத் தொடர்ந்து, முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணையின் முதலாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
புத்தாண்டு விடுமுறைக்காக அனைத்துப் பாடசாலைகளுக்கும் கடந்த 10 ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.
