Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

July 10, 2026

தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

July 10, 2026

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

July 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மன்னாரில் பயங்கரம்: கணவனை துண்டு துண்டாக வெட்டி மலசலகூடக் குழியில் வீசிய மனைவி!
Breaking

மன்னாரில் பயங்கரம்: கணவனை துண்டு துண்டாக வெட்டி மலசலகூடக் குழியில் வீசிய மனைவி!

ThanaBy ThanaMay 5, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மன்னார் மூர் வீதியில் வாடகை வீடொன்றில் வசித்து வந்த தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு, கணவன் படுகொலை செய்யப்பட்டு சடலம் துண்டு துண்டாக சிதைக்கப்பட்ட கொடூர சம்பவத்தில் முடிவடைந்துள்ளது.

மன்னார் மூர் வீதியில் வசித்து வந்த இந்த தம்பதியினருக்கு இடையே கடந்த சனிக்கிழமை (02) இரவு கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் உச்சக்கட்டமாக, மனைவி தனது கணவனைத் தாக்கி கொலை செய்துள்ளார்.

கொலை செய்த பின்னர், ஞாயிற்றுக்கிழமை (03) அன்று சடலத்தை மிகக் கொடூரமான முறையில் துண்டு துண்டுகளாக வெட்டியுள்ள சந்தேகநபர், அவற்றை உறைகளில் இட்டு வீட்டின் மலசலகூடக் குழியினுள் வீசி மறைத்துள்ளார்.

இந்தக் கொடூரச் செயலைச் செய்த பெண், திங்கட்கிழமை (04) மன்னார் பொலிஸ் நிலையத்தில் தானாக முன்வந்து சரணடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பொலிஸார் மன்னார் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரின் முன்னிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து, மலசலகூடக் குழியிலிருந்து சிதைக்கப்பட்ட நிலையில் இருந்த சடலத்தை மீட்டனர்.

பொலிசாரின் விசாரணையில் உயிரிழந்தவர்: மன்னார் வங்காலை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் என அடையாளங்காணப்பட்டுள்ளதோடு

கொலையுடன் சம்பந்தப்பட்ட பெண் சந்தேகநபர் மன்னார் பனங்கட்டு கொட்டு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையர் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குடும்பத் தகராறு முற்றிய நிலையிலேயே இக்கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரான மனைவி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னார் பகுதியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

    July 10, 2026

    புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு புதிய பாலம் மக்களின் பாவனைக்காக கையளிப்பு

    July 10, 2026

    டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்காக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனை வழங்கும் ஒரு சிறப்பு ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாட்டுத் திட்டம்.

    July 10, 2026
    Editors Picks

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

    July 10, 2026

    அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

    July 10, 2026

    புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு புதிய பாலம் மக்களின் பாவனைக்காக கையளிப்பு

    July 10, 2026

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

    July 10, 2026

    அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

    July 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.