செ.திவாகரன்
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும், லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம்
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற ஒரு தனியார் பேருந்தும், லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதைத் தொடர்ந்து, பேருந்தில் பயணித்த ஒரு பாடசாலை மாணவர் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தன.
ஹட்டன் – பொககவந்தலாவ பிரதான சாலையில் உள்ள நோர்வூட் வென்சர் தோட்டம் பகுதியில் இன்று காலை சுமார் 7:10 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பொகவந்தலாவவிலிருந்து ஹட்டனில் உள்ள பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்துக்கு எதிர் திசையில், ஹட்டனிலிருந்து பொகவந்தலாவ நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது .
விபத்து நடந்த நேரத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 20 ஆசிரியர்கள் பேருந்தில் பயணித்துள்ளன எனவும்
தற்போதைய நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பிரதான வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என நோர்வூட் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
