குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மூவர் மஸ்கெலியா வைத்திய சாலையில்.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமி மலை கவரவலை தோட்ட 200 ஏக்கர் பிரிவில் இன்று காலை 8.30.மணிக்கு தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த வேளையில் குளவி கொட்டுக்கு இலக்கான 15 பெண்களில் மூன்று பெண்கள் அதிக அளவில் கொட்டுக்கு இலக்கான நிலையில் உடனடியாக மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு வர பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் இன்று காலை முதல் சற்று வெப்பமான வானிலை நிலவுகிறது இதன் காரணமாக தேயிலை செடிகள் கீழ் பகுதியில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு களைந்து கொட்டியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என இப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
மஸ்கெலியா நிருபர்.
