உள்ளூராட்சி மன்றங்கள் நகர்புர தின்ம கழிவுகளை எடுக்கின்றதை போன்று தோட்டபுர தின்ம கழிவுகளையும் எடுக்க அரசாங்கம் உதவ வேண்டும் என்று அன்மையில் ஜனாதிபதியின் Clean Srilanka பிரத்தியேக செயலாளர் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள் , உப தவிசாளகள், செயலாளர்கள் சுற்றுசூழல் உத்தியோகஸ்தர்களுக்கு ஒழுங்கு செய்த கூட்டத்தில் மஸ்கெலியா பிரதேசசபை உப தவிசாளர் ராஜ் அசோக் (ராஜ் குமார்) இந்த விடயங்களை முன் வைத்து பேசினார்.
எமது நாட்டில் “Clean Srilanka “வேலை திட்டதின் கீழ் அதிகமாக பணம் ஒதுக்கி செய்யபடுகின்ற.ஒரு சேவையாகும்.
இதன் பிரதான நோக்கம் எமது சுற்றுசூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதாகும்,
அதன் அடிப்படையில் பொது இடங்கள் மற்றும் நகர இடங்கள் மாத்திரம் சுத்தமாக இருந்தால் போதுமா.என்ற கேள்வி எழுப்புகிறது.
நாம் வாழும் மலையக மக்கள் செறிந்து வாழும் தோட்டபுரபகுதிகளும் சுத்தமாக இருக்க வேண்டும்.
உள்ளூராட்சி மன்றங்கள் நகர் புரங்களில் மாத்திரம் குப்பைகள் எடுக்கின்றன. பெருந்தோட்ட செறிந்து வாழும் தோட்டப்புரங்களில் கழிவு பொருட்கள் எடுப்பதில்லை
அப்பொழுது தோட்டப்புரங்களின் குப்பைகள் எங்கு செல்கின்றன என்பது கேள்விக்குறியாக உள்ளது.
வரும் காலத்தில் இந்த குப்பைகளை தோட்டப்புரங்களிலும் எடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்கான வாகனங்கள், வேலை ஆட்கள் மற்றும் ஏதாவது ஒரு முறைக்கு செல்ல வேண்டும் என்று உப தவிசாளர் ராஜ் அசோக் (ராஜ் குமார்) வழியுருத்தியுள்ளார்.
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.
