கொட்டகலை பிரதேச சபைக்குச் சொந்தமான, பத்தனை காட்டுமாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள 5 கடையறைகளைத் திறந்த கேள்வி மூலம் (Open Tender) குத்தகைக்கு விடுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதனை முன்னிட்டு, கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் அவர்களின் தலைமையில் அக்கடையறைகள் (24)நேரில் சென்று கள ஆய்வு செய்யப்பட்டன.
இக்கள ஆய்வின் போது தலைவருடன் இணைந்து பின்வரும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்:வி. விஜேசுந்தரம் – செயலாளர், கொட்டகலை பிரதேச சபை,ஹேரத் – தொழில்நுட்ப அதிகாரி, ராஜகருணா – அபிவிருத்தி உத்தியோகத்தர், சுந்தரராஜு – வருமானப் பரிசோதகர்.
இலங்கையின் எப்பாகத்தில் உள்ளவர்களும் இந்த கடையறைகளுக்கான திறந்த கேள்வி கோரல் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப விநியோகம்: 22.06.2026 முதல் 13.07.2026 வரை கொட்டகலை பிரதேச சபைப் பணிமனையில் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி: 14.07.2026 அன்று காலை 10.00 மணி வரை.
டெண்டர் பெட்டி திறக்கப்படும் நேரம்: 14.07.2026 அன்று காலை 10.30 மணிக்கு டெண்டர் குழுவின் முன்னிலையில் கேள்விப்பெட்டி திறக்கப்படவுள்ளது.
