Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

August 22, 2026

இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

August 21, 2026

மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவு – மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிப்பு

August 21, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மொனராகலை பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டறிந்த பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்*
மலையகம்

மொனராகலை பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டறிந்த பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்*

ThanaBy ThanaJune 26, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

*மொனராகலை பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டறிந்த பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்*
*கல்வி, காணி, அடிப்படை வசதிகள் தொடர்பில் விரைவான தீர்வுக்கு பணிப்புரை*

 

மொனராகலை மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள், நேற்று(24/06/2026) குமாரவத்த, பறாவிலை, கும்புக்கன, முப்பனவெளி பிரதேசங்களில் வாழும் பெருந்தோட்ட மலையக மக்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடினார்.

மக்களின் அன்றாட பிரச்சினைகளை களத்தில் நின்று அறிந்துகொள்ளும் நோக்கில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, மக்கள் தமது நீண்டகால கோரிகைகளை நேரடியாக பிரதி அமைச்சரிடம் முன்வைத்தனர்.

*மக்கள் முன்வைத்த முக்கிய பிரச்சினைகள்:*
கல்வி தொடர்பான பிரச்சினைகள்

பெருந்தோட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, பௌதீக வள பற்றாக்குறை, உயர்தரத்தில் கணிதம், விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்ப பிரிவுகளை ஆரம்பித்தல், அறநெறி பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் என்பன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

*காணி மற்றும் வீடமைப்பு*:

பெருந்தோட்ட மக்கள் எதிர்கொளும் காணி உரிமை பிரச்சினைகள், அடிப்படை வசதிகளுடனான வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பான கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

கிராமிய வீதிகளை புனரமைத்தல் , சுத்தமான குடிநீர் வசதிகளைப் பெற்றுக் கொள்ளுதல் போன்ற அத்தியாவசிய தேவைகள் தொடர்பிலும்
அரச வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் பொழுது மொனராகலை பெருந்தோட்ட இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்குதல் மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பிலும் மக்கள் தமது கோரிக்கைகளை முன் வைத்தார்கள்.

மக்கள் முன்வைத்த அனைத்து கோரிகைகளையும் பொறுமையாக கேட்டு அறிந்துகொண்ட பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை பெற்றுதரும் நோக்கில் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகளையும் சில பணிப்புரைகளையும் வழங்கினார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், “பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் இனி கோப்புகளில் முடங்காது. கல்வி, காணி, வீடு, வீதி, குடிநீர் என மக்கள் முன்வைத்த ஒவ்வொரு விடயத்திற்கும் காலஎல்லையுடன் கூடிய தீர்வு திட்டம் முன்னெடுக்கப்படும் . அதற்கான நடவடிகைகள் எமது அமைச்சின் ஊடாக தொடர்சியாக மேற்கொள்ளப்படும்” என உறுதியளித்தார்.

பெருந்தோட்டப்
பகுதி மக்களின் வாழ்கைத் தரத்தை உயர்த்துவதுடன், அவர்களுக்கான சமூக மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான இலக்கு எனவும் அவர் தெரிவித்தார்.

இதன் போது மொனராகலை பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், பிரதேச மக்கள் மற்றும் சமூக பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் மீறல்: அமைச்சர் சமந்த வித்யாரத்னவுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்

    August 20, 2026

    அதிகாரம் கையில் இருந்தும் பழைய சுற்றறிக்கையை காரணம் காட்டுவது ஏமாற்று வேலை” – மனோ கணேசன் எம்.பி. சாடல்*

    August 20, 2026

    தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தக் கொடுப்பனவை 500 ரூபாவாக அதிகரிக்கக் கணபதி கனகராஜ் கோரிக்கை!

    August 20, 2026

    தலவாக்கலையில் தகுதியற்றவை என கண்டறியப்பட்ட 28 வாகனங்களின் அனுமதிப் பத்திரங்கள் தற்காலிக ரத்து!

    August 19, 2026
    Editors Picks

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026

    இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

    August 21, 2026

    மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவு – மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிப்பு

    August 21, 2026

    ​”விடுமுறைக் காலத்தில் பிள்ளைகளைச் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கவும்” – பெற்றோரையும் ஆசிரியர்களையும் கேட்டுக்கொண்டார் பிரதமர்!

    August 21, 2026

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026

    இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

    August 21, 2026

    மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவு – மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிப்பு

    August 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.