Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

லங்கா ப்ரீமியர் லீக் (LPL): ‘யாழ்ப்பாண கிங்ஸ்’ அணியின் உரிமையாளர் கைது – பெரும் பரபரப்பு!

July 17, 2026

சாய்ந்தமருது அபிவிருத்தி திட்டங்கள் புறக்கணிப்பு: இருளில் மூழ்கும் கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா!

July 17, 2026

கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்

July 17, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அஸ்வெசும திட்டத்தில் அதிரடி மாற்றம்: 4 இலட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் நீக்கம்!
இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் அதிரடி மாற்றம்: 4 இலட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் நீக்கம்!

ThanaBy ThanaJuly 1, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அஸ்வெசும (Aswesuma) நலன்புரிப் பயனாளிப் பட்டியலில் இருந்த சுமார் 4 இலட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள் இன்றைய தினம் முதல் அப்பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, தற்காலிகமாக வறுமை நிலைக்குத் தள்ளப்பட்ட குடும்பங்களே இவ்வாறு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அஸ்வெசும திட்டத்தின்கீழ் ‘விளிம்புநிலை குழுவினர்’ (Marginal groups) என வகைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இக்குடும்பங்களுக்கு மாதாந்தம் சுமார் 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

உண்மையில் கடந்த டிசம்பர் மாதமே இக்குடும்பங்களை அஸ்வெசும பட்டியலில் இருந்து நீக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், நாட்டில் ஏற்பட்ட ‘டிட்வா’ (Ditwa) சூறாவளி அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, மனிதநேய அடிப்படையில் அவர்களுக்கு மேலும் ஆறு மாத காலம் பட்டியலில் நீடிப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. அந்த அவகாசம் தற்போது நிறைவடைந்துள்ளது.

ஏற்கனவே, இத்திட்டத்தின் கீழ் ‘இடைநிலை’ (Transitional) பிரிவைச் சேர்ந்த சுமார் 4 இலட்சம் குடும்பங்கள் அஸ்வெசும பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த அதிரடி நீக்கங்களின் பின்னர், அஸ்வெசும நலன்புரிப் பட்டியலில் தற்போது ‘அதி வறிய’ மற்றும் ‘வறிய’ பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 13 இலட்சம் குடும்பங்கள் மாத்திரமே எஞ்சியுள்ளனர் என்று அமைச்சர் உபாலி பன்னிலகே சுட்டிக்காட்டினார்.

தற்போதுள்ள பயனாளிகளின் விபரம் மற்றும் புதிய கொடுப்பனவு விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன:

  • அதி வறிய பிரிவு (Ultra-Poor): 9 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் (மாதாந்த கொடுப்பனவு: 17,500 ரூபாய்)

  • வறிய பிரிவு (Poor): 4 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் (மாதாந்த கொடுப்பனவு: 10,000 ரூபாய்)

பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள உண்மையான ஏழைக் குடும்பங்களுக்கு இந்த நலன்புரி உதவிகள் முறையாகச் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கிலேயே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    லங்கா ப்ரீமியர் லீக் (LPL): ‘யாழ்ப்பாண கிங்ஸ்’ அணியின் உரிமையாளர் கைது – பெரும் பரபரப்பு!

    July 17, 2026

    சாய்ந்தமருது அபிவிருத்தி திட்டங்கள் புறக்கணிப்பு: இருளில் மூழ்கும் கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா!

    July 17, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்

    July 17, 2026

    முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன காலமானார்: தற்கொலை என சந்தேகம்!

    July 17, 2026
    Editors Picks

    லங்கா ப்ரீமியர் லீக் (LPL): ‘யாழ்ப்பாண கிங்ஸ்’ அணியின் உரிமையாளர் கைது – பெரும் பரபரப்பு!

    July 17, 2026

    சாய்ந்தமருது அபிவிருத்தி திட்டங்கள் புறக்கணிப்பு: இருளில் மூழ்கும் கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா!

    July 17, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்

    July 17, 2026

    முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன காலமானார்: தற்கொலை என சந்தேகம்!

    July 17, 2026

    லங்கா ப்ரீமியர் லீக் (LPL): ‘யாழ்ப்பாண கிங்ஸ்’ அணியின் உரிமையாளர் கைது – பெரும் பரபரப்பு!

    July 17, 2026

    சாய்ந்தமருது அபிவிருத்தி திட்டங்கள் புறக்கணிப்பு: இருளில் மூழ்கும் கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா!

    July 17, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்

    July 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.