Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் இயக்குநருடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

July 17, 2026

இந்து கோயில் கட்டிடக்கலையை ஆவணப்படுத்துவதில் ஸ்டெல்லா கிராம்ரிஷ்ஷின் பங்களிப்பு

July 17, 2026

அதிக விலை மற்றும் காலாவதியான பொருட்கள்: காலி முகத்திடலில் வியாபாரிகள் மீது நடவடிக்கை

July 17, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் இயக்குநருடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!
மலையகம்

மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் இயக்குநருடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

ThanaBy ThanaJuly 17, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் இயக்குநருடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

 

மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் இயக்குநர் பிரதீப் உளுவடுகே மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கிடையில் இன்று முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது.

 

இதன்போது, சமீபத்தில் இராகலை (செயின்ட் லியோனார்ட்ஸ்) தோட்டத்தில் வசித்து வந்த ஆறு குடும்பங்கள், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவால் தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில் தங்களது குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

 

இந்த நீதிமன்றத் தீர்ப்பு முழுமையான விபரங்களை முன்வைக்காமல் பெறப்பட்டதாகவும், குறித்த ஆறு குடும்பங்களும் மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தோட்டத்தில் வசிக்கும் தொழிலாளர் குடும்பங்கள் என்பதாலும், அவர்களை அக்குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றுவதற்கு காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லை எனவும் செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.

 

எனவே, இவ்விவகாரம் தொடர்பாக மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனம் உடனடியாக மேன்முறையீடு செய்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குடியிருப்பு உரிமையை மீண்டும் உறுதிப்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக நிறுவனத்தின் இயக்குநர் பிரதீப் உளுவடுகே செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்தார்.

 

மேலும், குறித்த ஆறு குடும்பங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்துடன் இணைந்து மேன்முறையீடு செய்து, அவர்களுக்கான நீதி கிடைக்க தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்

    July 17, 2026

    பசறை கல்வி வலயத்திற்கு புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் பொறுப்பேற்பு

    July 16, 2026

    நுகர்வோருக்கு அவசர அறிவித்தல்: நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்வழங்கல் சபை கோரிக்கை!

    July 16, 2026

    நோர்வூட்டில் – நள்ளிரவில் பாரிய இரத்தினக்கல் அகழ்வு: தேயிலைச் செடிகளை அழித்து அட்டகாசம்

    July 16, 2026
    Editors Picks

    மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் இயக்குநருடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

    July 17, 2026

    இந்து கோயில் கட்டிடக்கலையை ஆவணப்படுத்துவதில் ஸ்டெல்லா கிராம்ரிஷ்ஷின் பங்களிப்பு

    July 17, 2026

    அதிக விலை மற்றும் காலாவதியான பொருட்கள்: காலி முகத்திடலில் வியாபாரிகள் மீது நடவடிக்கை

    July 17, 2026

    லங்கா ப்ரீமியர் லீக் (LPL): ‘யாழ்ப்பாண கிங்ஸ்’ அணியின் உரிமையாளர் கைது – பெரும் பரபரப்பு!

    July 17, 2026

    மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் இயக்குநருடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

    July 17, 2026

    இந்து கோயில் கட்டிடக்கலையை ஆவணப்படுத்துவதில் ஸ்டெல்லா கிராம்ரிஷ்ஷின் பங்களிப்பு

    July 17, 2026

    அதிக விலை மற்றும் காலாவதியான பொருட்கள்: காலி முகத்திடலில் வியாபாரிகள் மீது நடவடிக்கை

    July 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.