# கொட்டகலையில் பரபரப்பு: ஈரோஸ் ஜனநாயக முன்னணி பிரதேசசபை உறுப்பினர் மீது தாக்குதல்!
**கொட்டகலை நகரில் நேற்று மாலை இடம்பெற்ற திடீர் மோதல் சம்பவமொன்றில், ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் கொட்டகலை பிரதேசசபை உறுப்பினர் கணேசன் இராஜேந்திரன் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.**
நேற்று மாலை 4.30 மணியளவில் கொட்டகலை நகரில் வைத்து, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களென அடையாளப்படுத்திக் கொண்ட சிலரால் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்த பிரதேசசபை உறுப்பினர் கணேசன் இராஜேந்திரன் உடனடியாக மீட்கப்பட்டு, தற்போது **டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில்** மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
