”கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மற்றும் சேறு போக்கும் மதகுகள் இன்று (05) காலை திறந்து விடப்பட்டுள்ளன.
இதன் மூலம் அதிகப்படியான நீர், வினாடிக்கு 130 கன மீற்றர் வேகத்தில் கொத்மலை ஓயாவிற்குள் வெளியேற்றப்பட்டு வருவதாக இலங்கை மகாவலி அதிகார சபையின் பொறுப்புப் பொறியிலாளர் தெரிவித்துள்ளார்.
வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், ஆற்றின் இருமருங்கிலும் உள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வெள்ள அபாயம் காணப் படும் பகுதிகள்:
கொத்மலை அணையின் கீழ் பகுதி: நுகவேல, ரிவர்சைட், மாவதுர.
மகாவலி கங்கையை ஒட்டிய தாழ்நிலங்கள்: உலப்பனே முதல் கம்பளை, வெலிகல்ல, கெலியோயா, பேராதனை, கட்டுகஸ்தோட்டை மற்றும் பொல்கொல்ல வரை.
எனவே, இப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் செயல்பட்டு, தமது உயிர் மற்றும் சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், நீர்த்தேக்கத்திற்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து, வெளியேற்றப்படும் நீரின் அளவிலும் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும் மகாவலி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.”
