இலங்கையின் புதிய இராணுவத் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தார்
இலங்கை இராணுவத்தின் 26ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லயப்டினன்ட் ஜெனரல் நியந்த பிரபஷ்பத்ன, இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை உத்தியோகபூர்வமாகச் சந்தித்தார்.
புதிய இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின்னர், லயப்டினன்ட் ஜெனரல் நியந்த பிரபஷ்பத்ன ஜனாதிபதியைச் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
தனது பதவியைப் பொறுப்பேற்றதன் பின்னர் அரசு தலைவரைச் சந்திக்கும் சம்பிரதாய முறைப்படி ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த இராணுவத் தளபதி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் சம்பிரதாயபூர்வமான நினைவுச் சின்னங்களைப் பரிமாறிக்கொண்டார்.
இதன்போது, புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லயப்டினன்ட் ஜெனரல் நியந்த பிரபஷ்பத்னவுக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
