சாலமன் பாப்பையாவின் மறைவு மனவருத்தம் அளிக்கிறது!– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் இரங்கல் –
தமிழின் சிறப்பையும், நகைச்சுவையின் நயத்தையும் பட்டிமன்றங்கள் வாயிலாக உலகத் தமிழர்களிடம் கொண்டு சென்ற தமிழறிஞரும், சிறந்த பேச்சாளருமான சாலமன் பாப்பையாவின் மறைவு மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிப்பதாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தனது தனித்துவமான பேச்சாற்றல், நகைச்சுவை உணர்வு மற்றும் தமிழ் மீதான ஆழ்ந்த பற்றின் மூலம் பல தலைமுறையினரையும் கவர்ந்தவர் சாலமன் பாப்பையா. அவரது மறைவு தமிழ் இலக்கியம் மற்றும் பட்டிமன்ற உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
தமிழை எளிமையாகவும் சுவையாகவும் மக்களிடம் கொண்டு சென்ற அவரது பணிகள் என்றும் நினைவுகூரப்படும். அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆர்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் எனவும், அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
