மட்டக்குளியில் இடம்பெற்ற கோர விபத்து; உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் அஞ்சப்படுகின்றன!
கொழும்பு – மட்டக்குளிய பகுதியில் இன்று இரவு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
இவ்வதிர்ச்சி விபத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், உயிரிழப்புகள் கூட ஏற்பட்டிருக்கலாம் என பலத்த சந்தேகங்கள் மற்றும் அச்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக விரைந்த மட்டக்குளிப் பொலிஸார், விபத்துக்கான காரணம் மற்றும் நிலவரம் குறித்து மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலதிக விபரங்கள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன.
