நானுஓயா சுரங்கப் பாதைக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில், தங்கக்கலை தோட்டத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
லிந்துலை தங்கக்கலை தோட்டத்தில் இருந்து மோட்டார் வண்டியில் நுவரலியா நோக்கிச் சென்று கொண்டிருந்த குறித்த இளம் தாய் மீது, எதிரே வந்த வேன் ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக நுவரலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தொடர்ந்து அதிகரித்து வரும் இத்தகைய வீதி விபத்துகளைத் தவிர்க்க, வாகனச் சாரதிகள் அதிவேகத்தைக் குறைத்து அதிக அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்த வேண்டும் எனப் பொலிஸாரும் சமூக ஆர்வலர்களும் தொடர்ச்சியாக எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சந்தரு
