பேருவளை நகரில் இருந்து 24 கிலோமீற்றர் அப்பால் உள்ள கடற்பிரதேசத்தில் நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது.
இன்று மதியம் 1 மணி அளவில், 3.7 மெக்னிடியுட் அளவில் இந்த நில அதிர்வு பதிவானதாக அனர்த்த முகாமை மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, களுத்துறை, பேருவளை, பாணந்துறை ஆகிய பிரதேசங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான. மேலதிக விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
