இரண்டாம் இணைப்பு
கம்பளை, எல்பிட்டிய பிரதேசத்தில் 22 வயதுடைய இளம் பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடம் ஒன்றை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
மேலும் குறித்த இடத்தை அகழ்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முதலாம் இணைப்பு
கம்பளை, எல்பிட்டிய பிரதேசத்தில் 22 வயதுடைய இளம் பெண் காணாமல் போயுள்ள நிலையில், குறித்த பகுதிக்கு திடீரென பொலிஸார் விரைந்துள்ளனர்.
குறித்த பகுதி தற்போது பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் அவ்விடத்தில் சடலம் ஒன்று இருப்பதாக சந்தேகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதியில் Fathima Munawwara என்ற இளம் பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயுள்ள நிலையில், பொலிஸாரின் இந்த செயற்பாடு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அப்பகுதி மக்கள் மத்தியில் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, சிசிடிவி காணொளி பெறப்பட்ட பள்ளிவாசலில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் பொலிஸார் இவ்வாறு முற்றுகையிட்டு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பொலிஸாரின் இந்த செயற்பட்டையடுத்து, அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் அவ்விடத்தில் குவிந்துள்ளதால் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
