-பதுளை நிருபர்-
மஹியங்கனை சொரபொர குளம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டி சாரதியாக பணிபுரியும் மஹியங்கனை பகுதியில் வசிக்கும் எம்.கருணாதாச (வயது 61) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவுஇ சொரபொர குளம் பகுதியில் இருந்து ஒருவரை மஹியங்கனை நகருக்கு அழைத்து வருவதற்காக சென்று கொண்டிருந்த போதே இவ்வாறு யானையின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் மஹியங்கனை ஆரம்ப வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்இ மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
