Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

August 2, 2026

கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

August 2, 2026

மத்திய மலைநாட்டில் தொடர்ந்து இடைவிடாது கடும் காற்றுடன் கூடிய மழை.

August 2, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தற்போதைய ஜனாதிபதியுடன் இணைந்து 69 இலட்சம் பேரின் நம்பிக்கையை நிறைவேற்ற செயல்படுவோம்…
இலங்கை

தற்போதைய ஜனாதிபதியுடன் இணைந்து 69 இலட்சம் பேரின் நம்பிக்கையை நிறைவேற்ற செயல்படுவோம்…

ThanaBy ThanaJune 19, 2023No Comments6 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
தற்போதைய ஜனாதிபதியுடன் இணைந்து 69 இலட்சம் பேரின் நம்பிக்கையை நிறைவேற்ற செயல்படுவோம்…
இன்றைய நாட்டின் நிலைமையை நோக்கும் போது திரு.ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கும் கட்சியின் தீர்மானம் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்…
எங்கள் வீடுகளை எரித்ததற்காக நாங்கள் மக்களை வெறுக்கவில்லை…
சுனாமிக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு திரு.மகிந்த ராஜபக்ஷ என்ன செய்தார் என்பது நினைவில் இல்லை…
– அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
முகநூல் தலைவர் அனுரகுமாரவின் பரிசுத்ததன்மை தகவல் வெளியாகியுள்ளது.
ஜே.வி.பி கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள் தற்போது எமது கூட்டங்களுக்கு வருகின்றார்கள்.
நாடு பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைந்து வருகின்றது – நாம் அரசியல் ரீதியாக கட்டியெழும்ப வேண்டும்…
முன்னாள் ஜனாதிபதிக்கு நேர்ந்ததை தற்போதைய ஜனாதிபதிக்கு ஏற்பட அனுமதிக்க மாட்டோம்…
     – நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களின் நம்பிக்கையை நிறைவேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஒரு வருடத்திற்கு முன்னர் நாடு எதிர்கொண்ட நிலைமையை தற்போதைய நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது திரு ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க கட்சி எடுத்த தீர்மானம் மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பளை மாவட்டத் தொகுதியில் நேற்று (18) உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது:
முதியோர்களை நாம் ஒருபோதும் கிழவர்கள் என்று குறை கூற மாட்டோம். நன்றாக ஆராய்ந்து பாருங்கள். நாகி மைனா,(வயதான மைனா) என்று கூறுபவர்கள் முதியவர்களை வெறுப்பவர்கள் வெளியிடும் பதிவுகளின் உள்ளே பாருங்கள். அவர்கள் நயவஞ்சகர்கள். பெற்றோரால் துன்புறுத்தப்பட்டவர்கள் அல்லது பெற்றோரால் அநீதி இழைக்கப்பட்டவர்கள். அவர்களே முதியவர்களை வெறுப்பவர்கள்.  அப்படிப்பட்டவர்களே வயதான மைனா என்று ஏசிக்கொண்டு முதியவர்களை கேலி செய்பவர்கள். முதியவர்களை அவமதிப்பவர்கள்.
நான் அமைச்சர் ரெஜி ரணதுங்கவின் மகன் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன். தி.மு ஜெயரத்னவின் மகன் என்று அனுராதா வாய் திறந்து சொல்லலாம். பெற்றோரைப் பற்றி பேச முடியாதவர்கள் தான் வயதான  மைனா என்று கூறிக்கொண்டிருக்கின்றார்கள்.
77 இல் அமைச்சர் தி.மு. ஜயரத்னவுக்கு என்ன நேர்ந்தது என்பதை நான் அறிவேன். 1977ல் எனது தந்தையின் வீடு எரிக்கப்பட்டது. 2022ல் எனது வீடு தீப்பற்றி எரிந்தது. இவை எமக்குப் பழகிவிட்டன. நாங்கள் மக்களை வெறுக்கவில்லை. இவைகளை ஒட்டுமொத்த சமுதாய மக்களும் செய்வதில்லை. சில நயவஞ்சகர்கள் இவற்றைச் செய்கிறார்கள். இதை செய்பவர்கள் என்றாவது ஒரு நாள் தண்டிக்கப்படுவார்கள்.
30 வருட கால யுத்தத்தை 2009 இல் முடிவுக்கு கொண்டு வந்த தலைவர் தான் திரு.மகிந்த ராஜபக்ஷ. அவர்  2015 இல் தோல்வியடைந்தார். 05 வருடங்கள் கடக்கவில்லை எமது மக்கள் அந்த யுத்தத்தை மறந்துவிட்டார்கள். திரு மகிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதற்காக மாறாக பொய் சொல்லி சமூகத்தில் வெறுப்பை உருவாக்கி அவர்கள் மறக்கவைத்தார்கள்.
இன்று நாம் வீதியில்; இறங்கி ரயிலிலோ, பேருந்திலோ செல்லக்கூடிய சூழலை உருவாக்கியது யார் என்பது நமக்குத் தெரியும்.  சுனாமிக்குப்.பின்னர் பிறந்தவர்களுக்கு அவை நினைவில் இல்லை.
அன்று எம்மோடு இருந்தவர்கள் கூட நுகேகொடை மேடைக்கு செல்ல அஞ்சினார்கள். பல அச்சுறுத்தல்கள் மிரட்டல்கள் வந்தபோது அனைவரும் திரு.மகிந்தவை விட்டு விலகினர். அன்று நான் முதலமைச்சராக எனது உத்தியோகபூர்வ இல்லத்தில்; இருந்து கொண்டே  மகிந்த காற்றை மீண்டும் ஆரம்பித்து திரு மகிந்த ராஜபக்சவுக்கான போராட்டத்தை ஆரம்பித்தோம். அன்று செய்த பணியை நினைத்து இன்றும் மகிழ்ச்சி அடைகிறேன்.
2015ஆம் ஆண்டு தோற்று 2019ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உருவாக்கனோம். அன்றைய தினம் மாகாணசபை உறுப்பினர்களுடன் நாடுமுழுவதும் சுற்றித் திரிந்து ஒவ்வொரு  கிராம சேவைப் பிரிவுகளில் இருந்தும்   20 உறுப்பினர்கள் படி திரட்டி ஆரம்பிக்கப்பட்ட கட்சியே இது.
இந்த கட்சி யாருடைய தனிப்பட்ட பரம்பரைச் சொத்தும் அல்ல. இந்த கட்சி எங்களுடையது. இந்த கட்சி உங்களுடையது. இந்த கட்சியை யாராலும் வீழ்த்த முடியாது.
ஓராண்டுக்கு முன் சுனாமியால் வீடுகள் எரிந்து நாசமானது. திரு.அமரகீர்த்தி அத்துகோரல கொல்லப்பட்டார். 69 இலட்சம் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை விட்டு விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அந்தச் சவால்களுக்கு முகம் கொடுத்த குழுவாகும். நாங்கள் ஒரு கட்சியாக வலுப்பெற்றோம்.
 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வழிநடத்தும் எமது தலைவர்கள் ஒருபோதும் கொலை செய்ததில்லை. இந்த நாட்டை அழிக்க அவர்கள் எதையும் செய்யவில்லை. அவர்கள் எப்பொழுதும் இந்த நாட்டை பாதுகாத்து வந்தனர். திரு.மகிந்த ராஜபக்ச இந்த நாட்டை காப்பாற்றினார். கோட்டாபய ராஜபக்ஷ, உலகெங்கிலும் கோவிட் தொற்றுநோயால் மக்கள் இறந்து கொண்டிருந்தபோது, ​​​​நமது நாட்டு மக்களின் உயிர்களைப் பாதுகாக்க பாடுபட்டார். நாடு மூடப்பட வேண்டுமா , கூடாதா என்பது குறித்து வைத்தியர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்த போது, ​​பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் மீள முடியும் மக்கள் இறந்தால் மீண்டும் மக்களை உயிர்ப்பிக்க முடியாது என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். கொஞ்ச நாள் நாட்டை மூடிவிட்டு மக்களுக்கு தடுப்பூசி போட்டு மக்களை பாதுகாப்பாக வைத்து நாட்டை திறப்போம். மக்கள் நலனுக்காகவே அவ்வாறான  ஒரு முடிவை எடுத்தார்.
அவர் ஆட்சிக்கு வந்த பிறகு ஒன்பது மாதங்களுக்கு முன்பு மட்டுமே அவரால் வேலை செய்ய முடிந்தது. கோவிட் தொற்றுநோயால் நாடு வீழ்ச்சியடைந்தது. மறுபடியும் போராட்டத்தால் நாடு வீழ்ந்தது. பொருளாதார நெருக்கடியால் மக்கள் பாதிக்கப்பட்டபோது, ​​மக்கள் மாற்று வழிகளைத் தேடத் தொடங்கினர். சுனாமி வந்தால் பெரிய மரங்களை வீழ்ந்தும் மீண்டும்  நிமிர்த்தி விடுகிறார்கள். சிறு மரங்கள் விழுந்தும் நேராகின்றன. மரங்கள் கூட ஒட்டுமொத்தமாக இருந்து பலமாகின்றன. எங்கள் கட்சியும் அப்படித்தான். சுனாமியால் வீழ்ச்சியடைந்த ஒரு வருடத்தின் பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை புத்துயிர் பெறச் செய்து பலப்படுத்த முடிந்தது. அதன் முடிவுகளை இன்று காண்கிறோம்.
போராட்டம் முடிந்து இரண்டு, மூன்று வாரங்கள் கழித்து, போராட்டம் செய்தது யார் என்று பாராளுமன்றத்தில் கூறினேன். ஒடுக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் மக்கள் போராட்டத்திற்கு வந்தனர். அரச சார்பற்ற நிறுவனங்கள் அதனை சாதகமாக்கிக் கொள்ள, பௌத்த மத எதிர்ப்புக் குழுக்கள் ஒன்று சேர்ந்தன. கிராமங்களில் பிரச்சனைகளை உருவாக்க மக்கள் வெளியே கொண்டு வரப்பட்டனர். இறுதியில், மக்கள் அதை விட்டு வெளியேறியபோது, ​​அது விபச்சாரிகள், கொள்ளையர்கள் மற்றும் பாதாள உலகத் தலைவர்களால் கைப்பற்றப்பட்டது. அந்த அணிதான் எங்களுக்கு இருந்த மோசமான எதிரி.
அவர்கள் இந்த நாட்டை போதைப்பொருளால் அழிக்க முயன்றனர். திரு.கோத்தபாய அதைத் தடுக்க நடவடிக்கை  எடுக்கும் போது   அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது போதை பாவனையாளர்கள். பாதாள உலக தலைவர்களை அழிக்கையில் அவர்கள் எமக்கு தெரிவித்தனர்.
பாதாள உலகத்தை நம்பியிருந்த விபச்சாரிகளும் போதைப்பொருள் வியாபாரிகளும் உயிர் இழந்தனர். அவர்கள்தான் இறுதியாக காலி முகப் போராட்டத்தில் முன்னிலை வகித்தனர். அப்படிப்பட்ட போராட்டத்தில் இருந்தவர்களே இன்று பேசுகிறார்கள்.
போராட்டத்தின் பின்னர் திரு.ரணில் விக்கிரமசிங்கவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்க கட்சி என்ற வகையில் தீர்மானம் எடுக்கப்பட்டது.  இன்று அந்த முடிவை எடுத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஒரு வருடத்திற்கு முன்னர் இந்நாட்டின் நிலைமையை நோக்கும் போது இன்று ஜனாதிபதி நாட்டை பொருளாதார ரீதியில் மீட்க பாடுபட்டுள்ளார். திரு.ரணில் விக்கிரமசிங்கவை நான் திட்டிய அளவுக்கு யாரும் திட்டவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தை பொது மேடைகளில் விமர்சித்தவன் நான். கட்சியை விட நாட்டிற்காக எப்போதும் சிந்தித்து உழைக்கும் குழுவாக நாங்கள் இருப்பதால், தற்போதைய ஜனாதிபதி சவால்களை ஏற்று நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய மற்றும் எதிர்காலத்தை கட்டியெழுப்பக்கூடிய தலைவர் என்பதனால் அவருக்கு ஆதரவளிக்க தீர்மானித்தோம். எங்களுடைய தனிப்பட்ட அரசியல் கருத்துக்களைப் பொருட்படுத்தாமல், திரு.ரணில் விக்கிரமசிங்க இந்த வருடத்திற்குள் வரிசைகளில் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வந்தார். இந்நாட்டில் நிலவும் மின்வெட்டுக்கு தீர்வு காண பாடுபட்டார்.
எமக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. அந்த நம்பிக்கையை நிறைவேற்ற தற்போதைய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுகின்றோம்.
வரும் எந்த தேர்தலுக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். கட்சி என்ற ரீதியில் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம் என்றும் அவர் கூறினார்.
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
விசித்திரக் கதைகளை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் திரு.மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில்தான் நாடும் கிராமமும் பயன்தரும் நிலை ஏற்பட்டது. கிராமத்து பையனுக்கும் பெண்ணுக்கும் அப்போது வேலை கிடைத்தது. நன்றியுணர்வை அறிந்த நீங்கள் அதை நினைவில் கொள்வீர்கள். மக்கள் சக்தி திரு.சஜித் பிரேமதாச பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. இது வெறும் நேர விரயம். அவரது 60, 70 பேர் கொண்ட குழு நாளை மறுதினம் திரு.ரணில் விக்கிரமசிங்கவுடன் அமர்ந்திருக்கும். அவர் தனது சக ஊழியர்களை கூட வைத்திருக்க முடியாது.
பேஸ்புக் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் பரிசுத்தத் தன்மை  என்னவென்பது தற்போது வெளியாகியுள்ளது. அதன் காரணமாகவே கடந்த காலங்களில் ஜேவிபி கூட்டங்களில் இருந்த நண்பர்கள் இன்று எமது சந்திப்பிற்கு வந்துள்ளனர்.
இன்று நாடு பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்து வருகிறது. அரசியல் ரீதியாக கட்டியெழுப்ப வேண்டும்.எந்த தேர்தலிலும் கிராமம் தோறும் சென்று கட்சியை பலப்படுத்தி  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றி பெறச் செய்வோம்.
கோவிட்-19 பரவியதால், உலகப் பொருளாதாரம் சரிந்தது.இருப்பினும், பல்வேறு கும்பல்களும் குழுக்களும் நெருக்கடியின் மூலம் செயல்பட்டனர்.இறுதியில் அது போராட்டமாக விரிவடைந்தது. அந்த போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களின் கணக்குகளுக்கு வெளிநாடுகளில் இருந்து டொலர்கள் வந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
சவாலை ஏற்றுக்கொள்ளுமாறு சஜித்தை முன்னாள் ஜனாதிபதி அழைத்துள்ளார். ஆனால் எதிர்கட்சித் தலைவருக்கு அந்தச் சவாலை ஏற்கும் அளவுக்கு முதுகெலும்பு இல்லை என்று நாடாளுமன்றத்தில் கூச்சலிட்டார். திரு.ரணில் விக்கிரமசிங்க மட்டுமே சவாலை ஏற்க முன்வந்தார். இன்று மக்கள் நிம்மதி பெருமூச்சை விடக்கூடிய நாட்டை உருவாக்கியுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதிக்கு இந்த பொருளாதார வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தேவையான ஆதரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள நாம் வழங்கி வருகின்றோம். திரு.கோத்தபாய ராஜபக்சவுக்கு நேர்ந்ததை திரு.ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நடக்க அனுமதிக்க மாட்டோம். இது அரசியல் பிரச்சினை அல்ல, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை. அதனால் தேர்தல் காலத்தில் அரசியல் செய்வோம்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி, நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுளா திஸாநாயக்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

    August 2, 2026

    நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை தொடரும்

    August 2, 2026

    ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை!

    August 2, 2026

    மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் ..

    August 2, 2026
    Editors Picks

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

    August 2, 2026

    மத்திய மலைநாட்டில் தொடர்ந்து இடைவிடாது கடும் காற்றுடன் கூடிய மழை.

    August 2, 2026

    நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை தொடரும்

    August 2, 2026

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

    August 2, 2026

    மத்திய மலைநாட்டில் தொடர்ந்து இடைவிடாது கடும் காற்றுடன் கூடிய மழை.

    August 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.