கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!
மத்திய மாகாணத்தில் தொடரும் திருட்டுச் சம்பவங்கள் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், கலஹா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கீழாத்தோட்டம் பகுதியில் நடு இரவில் துணிகரத் திருட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கீழாத்தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்குள் நுழைந்த திருடர்கள், அங்கிருந்த பிரதான உண்டியலையும் வழிபாட்டிற்குரிய வேல் மற்றும் பல பெறுமதியான பொருட்களையும் களவாடிச் சென்றுள்ளனர்.
இதேவேளை, அதே பிரதேசத்தில் ஆலயத்திற்கு அருக3மைந்திருந்த சிறிய வியாபார நிலையம் ஒன்றின் பூட்டையும் உடைத்து, அங்கிருந்த பணமும் பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், கலஹா பொலிஸாரும் கம்பளை தடவியல் பிரிவு பொலிஸாரும் உடனடியாகச் சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், தடயங்களைச் சேகரிக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
எமது நிருபர் – க. யோகா.
