இலங்கையில் முதல் தடவையாக கைத்தொலைபேசி மற்றும் டிஜிட்டல் ஊடகவியளாலர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட “MOJO Lanka” போட்டியில் சிறந்த படைப்பிற்காக
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் மற்றும் IREX நிறுவனம் ஒன்றிணைந்து கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த இந்த போட்டி நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவுகளிலும் பல போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இதனோடு இணைந்ததாக கைத்தொலைபேசி மூலமாக உருவாக்கும் வீடியோ தொடர்பிலான 2 நாள் செயலமர்வொன்றும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் சர்வதேச ஊடகவியளாலர்கள் ஊடாக தொலைபேசி ஊடகவியல் தொடர்பிலான தெளிவுபடுத்தல்கள் புதிய நுட்பங்கள் தொடர்பில் இலங்கையில் உள்ள ஊடகவியளாலர்கள் ஆவணப்படத்தயாரிப்பாளர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது.
அதில் ஒரு பகுதியாக நாட்டின் சிறந்த தொலைபேசி ஊடகவியளார்களுக்கான கதை தயாரிப்பதற்கான போட்டி இடம் பெற்ற நிலையில் தமிழ்,சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் சமர்ப்பிக்கப்பட்ட 300 கதைகளில் மன்னார் பேசாலை பகுதியில் மீன்பிடி சார்ந்த உபதொழில்களை மேற்கொண்டு வரும் மீனவ பெண்கள் தொடர்பாக மன்னார் மாவட்ட ஊடகவியளாலர் ஜோசப் நயனால் உருவக்கப்பட்ட கதை முதலாவது இடத்தை பெற்றுக் கொண்டது.
குறித்த கதை வெற்றி பெற்றதை தொடர்ந்து 2023 சிறந்த மொபைல் ஊடகவியளாலருக்கான விருதும் அதே நேரம் மூன்று இலட்சம் பெறுமதியான பரிசும் USAID நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான இயக்குனர் மைக்கல் ஹெய்ன்ஸினால் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
