பசறை ஆக்கரத்தனை பகுதியில் முகாமிட்டுள்ள விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து பசறை வராலந்த கொட்டமுதுன பகுதியில் சந்தேகத்திற்கு இடமான இடத்தினை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து நிரப்பி சுடக்கூடிய துப்பாக்கி ஒன்றை விஷேட அதிரடிப் படையினர் கைப்பற்றியதுடன் 52 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரையும் துப்பாக்கியையும் பசறை பொலிஸ் நிலையத்தில் விஷேட அதிரடிப் படையினர் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரிடம் பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி E.M.பியரட்ணவின் ஆலோசனைக்கு அமைய பசறை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேக நபரை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா

