Plantation Rural Education Development Organization நிறுவனத்தால் மலையகத்தில் உள்ள 50 இளைஞர் ,யுவதிகளுக்கு குடியுரிமை கல்வி மற்றும் வாக்குரிமை சம்பந்தப்பட்ட திட்ட செயற்பாடு ஹட்டன் சீடா வளாகத்தில் நேற்று (24/07/23)இடம் பெற்றது.
குறித்த நிகழ்வானது நிறுவன நிறைவேற்று பணிப்பாளர் ஜோக்கிம் தலைமையில் இடம்பெற்றதோடு, இந்நிகழ்வில் உதவி நிறைவேற்று பணிப்பாளர் சந்திரசேகரனும் கலந்து கொண்டார் .
நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நிறுவன மதிப்பீட்டு மற்றும் கண்காணிப்பு ஆய்வாளர் திருமதி. சரண்யா மாரியப்பன் அவர்களால் மேற் கொள்ளப்படப்பட்டது,மேலும் நிகழ்வில் முகாமையாளர்களான கருணாகரன், அமரசெல்வம், நிருவாக அலுவலர்கள் வினோதன், .நவின் பெரும் பங்கு ஆற்றினார்கள்.மலையகம் 200 நடை பயணம் தொடர்பான கருத்துக்களை இளைஞர் ,யுவதிகள் பரிமாறி கொண்டதோடு, எதிர் கால திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
கருணை நாயகம்

