மஸ்கெலியா விசேட நிருபர் செ.தி.பெருமாள்.27.10.2023.
ஹட்டன் நகரில் உள்ள பிரதான சந்தியில் இன்று மதியம் ஹட்டன் கல்வி வலயத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த எதிர்ப்பு நேற்று முன்தினம் கொழும்பு தலைநகரில் இடம் பெற்ற ஆசிரியர்கள் நடத்திய பேரணியில் காவல் துறையினர் நடத்திய தண்ணீர் தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை குண்டு வீச்சுக்கு எதிராக இந்த போராட்டம் இன்று மதியம் ஹட்டன் நகரில் உள்ள பிரதான சந்தியில் இடம் பெற்றது.
சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இவ்வாறு கலந்து கொண்டவர்கள் பதாகைகள் ஏந்திய நிலையில் அடக்குமுறைக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
சுமார் ஒரு மணி நேரம் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

