ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் “மலையகம்-200″ கலை நிகழ்வுகள்.
இலங்கைவாழ் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் முன்னோர்கள் இலங்கைக்கு வருகை தந்த 200 வருட நிறைவையொட்டி நாடளாவியரீதியில் நடைபெற்று வருகின்ற நிகழ்வுகளின் தொடர்ச்சியாக ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் எனது ஆலோசனை வழிகாட்டலிலும்,நெறியாள்கையிலும் கடந்த 22- 11-2023 புதன்கிழமை காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரையிலும் இரு அமர்வுகளாக இடம் பெற்ற “மலையகம்-200” தொடர்பான கலைநிகழ்வுகளின் காட்சிக்
கண்ணோட்டம் வருமாறு:
நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இலங்கை திறந்த பல்கலைக்கழக சமூக விஞ்ஞானத்துறை முன்னாள் பேராசிரியர் A.S. சந்திரபோஸ் அவர்களுக்கும், கௌரவ அதிதிகளாக வருகை தந்திருந்த பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி P. சரவணகுமார் மற்றும் நுவரெலிய கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி S.S.V. சர்மா ஆகியோருக்கும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்ட முன்னாள் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களான திரு S.கணேசன், திரு.P.அருள்மொழிச்செல்வன், மற்றும் திரு.S.கணபதிப்பிள்ளை ஆகியோருக்கும், நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாயிருந்து மாணவர்களை வழிப்படுத்திய அனைத்து விரிவுரையாளர்களுக்கும், நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கல்லூரியின் 25வது தொகுதி ஆசிரிய மாணவர்களுக்கும் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் நன்றிகளைத் தெரிவித்தார்.






























