டி சந்ரு திவாகரன்
நுவரெலியா மாநகரில் அமைந்துள்ள கண்டி மறை மாவட்டத்திற்கு உட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தின் 175 வது வருட (jubilee) ஜூபிலி பெருவிழா வெகு கோலாகலமாக இடம்பெற்றது.
நுவரெலியா புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தின் பங்கு தந்தை
சுதத் ரோஹன பெரேரா தலைமையில் சனிக்கிழமை (02.12.2023) காலை இவ் ஆண்டு விழா ஆரம்பமானது.
175 வது ஜூபிலி வருட விழாவில் கண்டி மறை மாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய கலாநிதி.வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இவரை வரவேற்கும் சிறப்பு நிகழ்வு காலை மணிக்கு நுவரெலியா புனித பூமி வலயமான நுவரெலியா-கண்டி பிரதான வீதியின் “கார்கில்ஸ்” சந்திக்கு அருகில் இடம்பெற்றது.
இதில் மத தலைவர்கள்,
கிருஸ்தவ ஆலயங்களின் அருட் தந்தைகள்,கன்னியாஸ்திரிகள், மற்றும் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அத்துடன் மாணவர்களின் பேன்ட் வாத்திய இசையுடன் அதிதிகள் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு ஆலயத்தில் 175 வது (jubilee) ஜூபிலி வருடத்தையொட்டி அமைக்கப்பட்டிருந்த ஞாபக கல்வெட்டினை கண்டி மறை மாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய கலாநிதி.வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை திரையரங்கம் செய்து வைத்தார்.
இவ் ஆண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்ட சர்வ சமய மதகுருமார்கள், உள்ளிட்ட முக்கிய விருந்தினர்களை விசேட கூட்ட மண்டபத்தில் வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன்,
கண்டி மறை மாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய கலாநிதி வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை தலைமையில் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தின் 175 வது (jubilee) ஜூபிலி வருட விழாவின் விசேட திருபலி ஒப்புக்
கொடுக்கப்பட்டது.
இந்த ஆண்டு விழாவினையொட்டி நுவரெலியா மா நகரம் கோலாகலமாக காட்சியளித்ததுடன் ஆயிரக்கணக்கான மக்கள் இவ் விழாவினை கண்டுகளிக்க வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

