பதுளை மாவட்ட பெருந்தோட்ட இளைஞர்கள் யுவதிகளின் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்தும் எண்ணக்கருவின் கீழ், விஷேட பயிற்சி வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் பதுளை மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிகழ்வானது, ஊவா மாகாண கிரிக்கெட் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரும் பதுளை மாவட்ட கிரிக்கெட், ஹொக்கி, கெரம் சம்மேளனங்களின் பொதுச் செயலாளரும் சமூக சேவையாளருமான பகி பாலச்சந்திரனின் அனுசரணையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த விஷேட கணினி செயலமர்வில் முதலாம் கட்டமாக பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வானது, பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ். ப்ரபாத் அபேவர்தன தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சில பதிவுகள்.




