ஹட்டன் அம்மன்நகர் வில்பிரட்புரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 21/6/2024 அம்பாளுக்குரிய முக்கிய வாரமாகிய (சுக்கிரவாரத்தில்) வெள்ளிக்கிழமையன்று இம்முறை ஆனிமாதப் பௌர்ணமி விரதம் சிறப்பாக இடம்பெற அம்பிகையின் திருவருள் கைகூடியுள்ளது. அன்று காலை முதல் எமது ஆலயத்தில் விஷேட பூஜைகள் நடைபெறும்.
முற்பகல் 11.00மணிக்கு அறநெறி பாடசாலை மாணவ, மாணவிகளின் தேவாரபஜனையை தொடர்ந்து நண்பகல் 12.00 மணிக்கு பௌர்ணமி விக்ஷேட பூஜையும், மகேஷ்வர பூஜையும் நடைபெற்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
இம்மாத பௌர்ணமி விரத அன்னதானத்திற்கு தங்களது பங்களிப்புகளும் இடம்பெற வேண்டும் என்றால் நிதி உதவியாக ஆலயத்தில் உள்ள அன்னதான உண்டியலில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அன்று பிற்பகல் 3.00 மணிக்கு திருவிளக்குப் பூஜை நடைபெறும். இத்திருவிளக்குப் பூஜையை கன்னிப்பெண்களும் சுமங்கலிப் பெண்களும் அம்பிகை ஆலயத்தில் அம்பிகைக்கு முன் செய்வதால் தாங்கள் வேண்டிய வரங்களைப் பெறலாம்.
அனைத்து அம்பிகை அடியார்களும் இந்தப்பூஜைகளில் பங்குபற்றி அம்பிகையின் திருவருளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
