Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

சிறைக் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒரே வழி ‘அறநெறிக் கல்வி’ – பிரதியமைச்சர் பிரதீப் தெரிவிப்பு!*

August 16, 2026

நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களில் நிதி முறைகேடு – ஜனாதிபதியின் மேற்பார்வையில் விசேட கணக்காய்வுக் குழு நியமனம்!

August 16, 2026

கினிகத்தேனையில் அதிவேகமாக வந்த இரு தனியார் பேருந்துகள் மோதி விபத்து!

August 16, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கொழும்பில் 50,000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான உரித்துரிமை உறுதிப் பத்திரங்கள் எதிர்வரும் 17ஆம் திகதி
இலங்கை

கொழும்பில் 50,000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான உரித்துரிமை உறுதிப் பத்திரங்கள் எதிர்வரும் 17ஆம் திகதி

ThanaBy ThanaJuly 15, 2024No Comments5 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உதா கம்மானங்களிலும் உரித்துரிமை பத்திரம் பெறாத 34,000 பேருக்கு உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியஆராச்சி தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் இருந்து வீடமைப்பு அமைச்சர்களினால் ஆரம்பிக்கப்பட்ட 1255 உதாகம்மானங்களில் 34,000 குடும்பங்களுக்கு உரிமைப் பத்திரம் வழங்கும் பணி அடுத்த வருடத்தின் நடுப்பகுதியில் நிறைவடையும் என அவர் வலியுறுத்தினார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டங்களில் காணியின் உரிமையானது பல்வேறு நிறுவனங்களிடமே உள்ளதாகவும், அந்தக் காணிகளை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு மாற்றும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.

ரன்தொர உறுமய வீட்டு உரிமைப் பத்திரம் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக இன்று (15) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ரஜீவ்சூரியஆரச்சி மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 2024 வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் பிரகாரம், 20 இலட்சம் பேருக்கு உரித்துரிமை காணி உரிமை வழங்கும் உறுமய வேலைத்திட்டமும், கொழும்பு நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் இரண்டரை இலட்சம் குடும்பங்களுக்கு அந்த வீடுகளின் முழு உரிமையையும் வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. அதன் ஆரம்ப சுற்றில், 50,000 கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு உரித்துரிமை உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் 8,000 அடுக்குமாடி குடியிருப்புகளும், 1,070 தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கீழும் உறுதிப் பத்திரங்களும் வழங்கப்பட உள்ளன. இந்த தேசிய நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜூலை 17 ஆம் திகதி சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

உறுமய வேலைத்திட்டம் தேர்தலை இலக்காகக் கொண்டு செயற்படுத்தப்படுகின்றதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர். டபிள்யூ.எஸ். சத்யானந்த, ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து ரன்தொர உறுமய வேலைத்திட்டம் ஒருபோதும் அமுல்படுத்தப்பட மாட்டாது என தெரிவித்தார்.

கடந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், இந்த வேலைத்திட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான சட்டப் பின்னணி மற்றும் கொள்கை விடயங்களைத் திட்டமிடுவதற்கும், அரசாங்க அதிகாரிகள் என்ற வகையில் தற்போதுள்ள சுற்றறிக்கைகளுக்கு இணங்குவதற்கும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆதரவைப் பெற்று உரிய திருத்தங்களைப் பெறுவதற்கும் கால அவகாசம் தேவைப்பட்டது என அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

மேலும் கருத்துரைத்த அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ்.சத்யானந்த மேலும் கூறியதாவது:

“கொழும்பு நகரம் உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு இலவச உரித்துரிமை உரிமைப் பத்திரங்களை வழங்கும் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தை சமர்ப்பிக்கும் போது முன்வைக்கப்பட்ட பிரதான வரவு செலவுத் திட்ட முன்மொழிவாக முன்மொழியப்பட்டது. வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்ட தருணத்திலிருந்து, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு அதற்குரிய வேலைகளைச் செய்தது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் சொத்து மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நகர அபிவிருத்தி அதிகார சபை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபை ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் ஒரு முழுமையான பின்னணியை உருவாக்கி இந்த திட்டத்தை செயல்படுத்தவுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானம் பெறும் வீட்டு உரிமையாளர்களுக்கான உரிமைப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்வதில் பல வருடங்களாகத் தடை உள்ளது.

இதன் கொள்கை, சட்ட விவகாரங்கள் பாதிக்கப்பட்டதால், உறுதிப் பத்திரங்கள் வழங்கும் திட்டம் தாமதமானது. இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான சட்ட விடயங்கள் சட்டமா அதிபர் திணைக்களம், அமைச்சரவை மற்றும் நிதியமைச்சு உட்பட அனைத்து நிறுவனங்களும் இணைந்து அதனை பாதிக்கும் சட்ட நிலைமையை இலகுபடுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டன.

ஒரு அமைச்சு என்ற வகையில், நகர அபிவிருத்தி அதிகாரசபை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபை ஆகியன நிறுவனங்களின் சட்ட சிக்கல்கள் மற்றும் கொள்கைகளை மீளாய்வு செய்து இந்த திட்டத்திற்கு தேவையான சட்ட கட்டமைப்பை உருவாக்கியுள்ளன. அதன்படி உறுதிப் பத்திரங்களை வழங்க ஆரம்பிக்க சாத்தியமானது.அதன்படி நாளை மறுதினம் கொழும்பு மாவட்டத்தில் உள்ள சுமார் 2000 அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு உறுதிகள் வழங்கப்படவுள்ளன.

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு உரித்துரிமை உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்காக 515 மில்லியன் ரூபா முத்திரை மற்றும் நொத்தாரிசு கட்டணமாக திறைசேரியால் வழங்கப்படும். 2024 வரவு செலவுத் திட்டத்தின் அங்கீகரிக்கப்பட்ட வரம்பின்படி, தொடர்புடைய விதிகளுக்கு உரிமை உண்டு. கொழும்பில் உள்ள 03 அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமைப் பத்திரங்களை வழங்குவதற்காக மட்டுமே இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது.”

ராஜீவ் சூரியராச்சி, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர்,

“ரன்தொர உறுமய திட்டத்தின் மூலம் சுமார் 1800 கொழும்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட இருக்கின்றன. ஜனாதிபதி பிரேமதாசவின் காலத்திலிருந்து கொழும்புக்கு வெளியில் வீடமைப்பு அமைச்சர்களால் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களில் 34,000 வீடுகளுக்கு உரிமைப் பத்திரம் வழங்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.அடுத்த ஆண்டு மத்தியில் இதனை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மிகவும் ஏழ்மையான குடும்பங்கள் இந்த திட்டத்திற்கு தகுதியுடையவர்கள். ஜனாதிபதியின் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 03 தசாப்தங்களாக உரிமை பெறாதவர்களுக்கு உரிமை கிடைக்கும்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்களின் காணி உரிமையானது பல்வேறு நிறுவனங்களிடம் உள்ளது. தற்போது அந்த காணி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு மாற்றப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளர்களுடன் இணைந்து காணி பிரச்சினைகளை தீர்த்து தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு காணிகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு மாவட்ட செயலாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அதன்பின், உடனடியாக உறுதிப் பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் ஏற்கனவே முடுக்கிவிடப்பட்டுள்ளது” என்றார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத்,

“2014 ஆம் ஆண்டின் நகர மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி அதிகாரசபை 2011 ஆம் ஆண்டில் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. நாட்டில் எத்தனை குடியிருப்புகள் உள்ளன? என்று. 900 ஏக்கரில் 1,499 குடியிருப்புகளில் 68,000 குடும்பங்கள் வாழ்கின்றனர்.இந்த புள்ளிவிபரங்களின்படி, நகர அபிவிருத்தி அதிகாரசபை திறைசேரியுடன் இணைந்து நகர மறுமலர்ச்சி திட்டத்தை ஆரம்பித்தது. 2014 முதல் இன்று வரை இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, இதுவரை, 13,600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 22 அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியேறியுள்ளன. ஜனாதிபதி பிரதமராக இருந்த காலம் முதல் இந்த நகர மறுமலர்ச்சி வேலைத்திட்டத்தின் கீழ் உரித்துரிமை பத்திரங்களை செயல்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்தார்.இந்த குடியேற்றங்கள் சில நிபந்தனைகளின் அடிப்படையில் செய்யப்படுகின்றன. அவர்கள் அரச நிலங்களை அனுமதியின்றி ஆக்கிரமித்துள்ளனர்.இந்த தீர்வு 30 ஆண்டுகளுக்குள் ஒரு மில்லியன் ரூபாய் செலுத்தும் முறையின் கீழ் செய்யதிட்டத்தின் முன்மொழிவின் ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம் இந்த பத்து இலட்சம் ரூபா மூன்று இலட்சம் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.2014 ஆம் ஆண்டு முதல் மாதந்தோறும் 3000 ரூபாய் செலுத்திய வீட்டு உரிமையாளர்கள் நிலுவைத் தொகையை செலுத்திய பின்னர் உரித்துரிமை பத்திரங்களைப் பெற தகுதியுடையவர்கள். இந்த 22 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு ஆதன முகாமைத்துவக் குழுவை நியமிப்பது மற்றொரு அளவுகோலாகும். ஆனால் அளவுகோல்களின்படி, 50% வீடுகள் உரித்துரிமை உரிமைகளைப் பெற வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை நகர அபிவிருத்தி அதிகார சபை ஏற்கனவே மேற்கொண்டு வருகின்றது. இதுவரை, 22 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் குழுக்கள் தொடங்கியுள்ளன.

மேலும், இன்னும் ஒரு அளவுகோல் என்னவென்றால், 2023 இறுதி வரை நாம் அவர்களுக்கு வழங்கிய அனைத்து வசதிகளுக்கும் அவர்கள் செலுத்த வேண்டிய பணத்தை அவர்கள் செலுத்தியிருக்க வேண்டும்.

இவற்றின் பராமரிப்பு எவ்வாறு செய்யப்படுகிறது என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். வீட்டு உரிமையாளர்களிடம் இருந்து ரூ.50,000 வசூலித்து நம்பிக்கை நிதியத்தை நிறுவவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இது கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபைக்கு வழங்கப்படுகிறது. அதன் கீழ் தேவையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த வீடுகளை இலவசமாக வழங்குவதன் மூலம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு நஷ்டம் ஏற்படுமா என்பது மற்றுமொரு கேள்வி. 2022 ஆம் ஆண்டளவில், வீட்டு வாடகை செலுத்தப்படாமையால் அதிகாரசபைக்கு 2 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் செலுத்தப்படாமையால் சுமார் 300 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி வாடகை நிலுவை 948 மில்லியன் ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.சுமார் 227 மில்லியன் ரூபா நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களின் நிலுவைகள் வசூலிக்கப்பட்டுள்ளன. வீட்டு உரிமையாளர்களுக்கு உறுதிப் பத்திரங்கள் கிடைப்பதில் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்கள் மிக விரைவாக பணம் செலுத்துகிறார்கள்.

நகர மறுமலர்ச்சித் திட்டம் எந்த வகையிலும் இலாபம் ஈட்டும் திட்டமல்ல. பராமரிப்பு, பாதுகாப்பு, தண்ணீர் மற்றும் மின்சார கட்டணம் ஆகியவை அதிகாரசபையால் செலுத்தபடுகின்றன. எனவே, இது அந்த வீட்டு உரிமையாளர்களின் பிரச்சினை அல்ல. அவர்களும் நம் நாட்டின் மக்கள் மற்றும் துணைக் கலாச்சாரத்தினர். சமீபத்திய கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, பணம் செலுத்தும் திறன் நிறுத்தப்பட்டது. இப்படியே தொடர்ந்து செயல்பட்டால் நிறுவனத்துக்குச் செலவும் நஷ்டமும் ஏற்படும்.எனவே உரித்துரிமை உறுதிப் பத்திரங்களை வழங்குவது நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சாதகமான விடயம் ஒன்றாகும். அதன்படி, ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் தேசிய விழாவில், அதிகாரசபை 1,000 பத்திரங்களை அடையாளமாக வழங்கும்.அதேபோல், இந்த ஆண்டு இறுதிக்குள், 9,000 பத்திரப்பதிவுகளை முடிக்க, நகர அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்து வருகிறது. இது எளிதான செயல் அல்ல.”

முனீரா அபூபக்கர்
2024.07.15

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சிறைக் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒரே வழி ‘அறநெறிக் கல்வி’ – பிரதியமைச்சர் பிரதீப் தெரிவிப்பு!*

    August 16, 2026

    அரசுப் புத்தகங்களை பழைய காகிதத்திற்கு விற்ற சம்பவம்: 5 பேருக்கு எதிர்வரும் 25 வரை விளக்கமறியல்!

    August 15, 2026

    அங்குலான கடற்பரப்பில் கடற்படைப் படகு விபத்து: 11 பேர் மீட்பு – ஒருவரைத் தேடும் பணி தீவிரமாக முன்னெடுப்பு!

    August 15, 2026

    இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் கொழும்பில் கோலாகலமாக கொண்டாட்டம் தேசியக் கொடி ஏற்றிய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

    August 15, 2026
    Editors Picks

    சிறைக் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒரே வழி ‘அறநெறிக் கல்வி’ – பிரதியமைச்சர் பிரதீப் தெரிவிப்பு!*

    August 16, 2026

    நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களில் நிதி முறைகேடு – ஜனாதிபதியின் மேற்பார்வையில் விசேட கணக்காய்வுக் குழு நியமனம்!

    August 16, 2026

    கினிகத்தேனையில் அதிவேகமாக வந்த இரு தனியார் பேருந்துகள் மோதி விபத்து!

    August 16, 2026

    அரசுப் புத்தகங்களை பழைய காகிதத்திற்கு விற்ற சம்பவம்: 5 பேருக்கு எதிர்வரும் 25 வரை விளக்கமறியல்!

    August 15, 2026

    சிறைக் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒரே வழி ‘அறநெறிக் கல்வி’ – பிரதியமைச்சர் பிரதீப் தெரிவிப்பு!*

    August 16, 2026

    நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களில் நிதி முறைகேடு – ஜனாதிபதியின் மேற்பார்வையில் விசேட கணக்காய்வுக் குழு நியமனம்!

    August 16, 2026

    கினிகத்தேனையில் அதிவேகமாக வந்த இரு தனியார் பேருந்துகள் மோதி விபத்து!

    August 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.