தலவாக்கலை மடக்கும் புற – புதுக்காடு தோட்டத்தை சேர்ந்த ஒருவர் மரத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு பலியானவர் ஒரு பிள்ளைகளின் தந்தையான 31 வயதுடைய நடராஜ் கணகேஸ்வரன் என தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை மடக்கும்பரை புதுகாடு பிரதேசத்திலுள்ள உயரமான மரத்தில் ஏறி விறகு வெட்டிக் கொண்டிருந்த போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான விசாரனைகளை தலவாக்கலை பொலிஸ்சார் ஆரம்பித்துள்ளனர்.
மேலும் உயிரிழந்தவர் நாளாந்தம் விறகு சேகரித்து அதனை விற்பனை செய்தே தனது குடும்பத்தை நடத்தி வந்ததாகவும் இன்று விறகு வெட்ட சென்ற வேளையில் மரத்தில் ஏறி விரகு வெட்டி கொண்டிருந்த வேலையில் குளவி கொட்டுக்கு இலக்காகி மரத்தில் இருந்து கீழே விழுந்தது சம்பவ இடத்திலேயே உயிரழ்ந்துள்ளார்.
அவருடன் சேர்ந்து மேலும் ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மடக்கும்பர வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என தலவாக்கலை பொலிசார் தெரிவித்தனர்.
கௌசல்யா.
