டி.சந்ரு செ.திவாகரன் நானுஓயா நிருபர்
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் லொறியொன்று வேனுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.(01) வெள்ளிக்கிழமை இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நுவரெலியாவிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்று ஹட்டன் பகுதியில் இருந்து நானுஓயா ரதல்ல குறுக்கு வழியாக நுவரெலியா நோக்கி சென்ற வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறியில் தடையாளி முறையாக இயங்காமை காரணமாக ஏற்பட்ட இயந்திர கோளாறே இந்த விபத்திற்கான காரணம் என ஆரம்ப கட்ட விசாரணை மூலம் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் லொறியொன்று வேனுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்
