புசல்லாவை பிளக் போரஸ்ட்டை சேர்ந்த சிறுவன் குளவிக்கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றும் இடம்பெற்றுள்ளதுடன், புசல்லாவை இந்து ஆரம்பப்பாடசாலையில் தரம் 03கில் கல்விபயிலும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பம் தொடர்பில் எமது செய்தியாளர் தெரிவிக்கையில் நேற்று பாடசாலை முடிந்து தனது தந்தையுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை வீட்டுக்கு அருகாமையில் இருந்த குளவி கூடு கலைந்து சிறுவன் மீதும் தந்தைமீதும் சரமாரியாக கொட்டியுள்ளது ,அதனைக்கண்ட சிறுவனின் தாய்,மற்றும் சகோதரர் காப்பாற்ற முட்பட்டப்போது அவர்கள்மீதும் குளவி கொட்டியத்தில் தந்தை அதி தீவிர சிகிச்சைப்பிரிவிலும் ,தரம் 09 படிக்கும் சகோதரர் உட்பட குடும்ப அங்கத்தவர்கள் 05 வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் புசல்லாவை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
