வரலாற்று சிறப்பு மிக்க சீதா எளிய சீதை அம்மன் ஆலய நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கு அமைய 50 லட்சம் பெறுமதி மிக்க புதிய மின் பிறப்பாக்கி இயந்திரம் ஒன்றை லங்கா ஐஓசி நிறுவனத்தினர் 16.03.2025 காலை 11.00 மணிக்கு ஆலய நிர்வாக சபையினிடம் கையளித்தனர்.
இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலய நிர்வாக பிரிவின் உயர் அதிகாரி சச்சின் குமார் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமையாளர் ஜமிந்த ஜே பெரேரா ஆகியோரினால் இவ் மின் பிறப்பாக்கி இயந்திரம் சீதையம்மன் ஆலய வளாகத்தில் உத்தியோகபூர்வமாக ஆலய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் மற்றும் ஆலயத்தின் ஆயுள் காப்பாளர் ஆதிமூலம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இதன் போது சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆலய நிர்வாக சபையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
