கொட்டாஞ்சேனை பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையில் அவர் கைதாகியுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 3.94 கிலோகிராம் ஐஸ் மற்றும் 215 கிராம் ஹெரோயின் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் போதைப்பொருள் வர்த்தகத்தினால் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 600000 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
